Aravind
மிதவை போல் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை நம்மைப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது. அதற்கு உருவுமில்லை அருவுமில்லை என உணரும் தருணத்தில் எழும் துக்கத்தை எதிர்கொள்ளவதற்காக நாம் உருவாக்கிய லட்சியக்கனவுதான் சீர்மையோ? இயற்பியல், உயிரியியலில் இருந்து நுண்கலைகளான ஓவியம், சிற்பம். இசை வரை மானுடரின் கேள்வியாகவும் கனவாகவும் இருப்பது சீர்மை. எந்தவொரு ஒருங்கிணைவும் இல்லாத வாழ்வின் மீது மனிதன் ஏற்றும் ஒழுங்குதாள் சீர்மையென்றா ல் இத்தனை கலைகளையும், இத்தனை கண்டுபிடிப்புகளையும் உருவாக்கிய மையவிசை தான் என்ன?
Cince and Ciri நூலை எழுதிய சென் வில்பர் தான் இந்நாவலின் மையக் கதாபாத்திரம். நாவலின் கதைசொல்லியும் இக்கேள்விகளைச் சந்திக்கிறான் அவனும் சீர்மை எனும் மாமத்தைப் பின்தொடர்கிறான் அவன் உருவாக்க நினைப்பதோ சுருத்துருக்களாலான சீமையை (conceptual symmetry) உலகிலுள்ள அத்தனை அறிவுத்துறைகளுக்கும் அடியி உள்ள ஒருங்கிணைவை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் அனைத்தையும் உள்ளடக்கிய சீர்மையைக் கட்டமைக்க முனையும் அவனது பயணத்தை அதில் அவன் அடையும் வெற்றிகளையும் சரிவுகளையுமே இந்நாவல் பேசுகிறது ஆனால் லட்சியவாதத்தின் சரிவையோ அர்த்தமின்மையையோ பேசும் கதையல்ல இது மாறாக லட்சியவாதம் அதன் அத்தனை கனலோடும் எழுந்து வரும்போது, அது விதியோடு வாசி வெக்கையில் வெந்து பளியில் உறைந்து பிறகு நீரின் நெகிழ்வை உணரும் தருணத்தையே இந்நாவல் சித்தரிக்க முற்படுகிறது அருவியின் குளுமையைக் காட்டுத்தீ அறியும் கணங்கள் அனைத்தும் சிவசக்தியின் சுனாங்களே அவ்வகையில் இந்நாவல் நடைபெறும் சூழல் நமக்குப் புதிதாக இருப்பினும் அதன் தொன்மங்கள் நமக்கு அணுக்கமானவையே.

