Author: Magudeswaran
தமிழைக் கற்றுக்கொள்வதற்குப் புதிர்வழியைத் தேர்ந்தெடுப்பது அருமையான முறை, பயில்வோர்க்கு முதற்கண் கற்பித்து, அந்தக் கற்பிப்பின் பொருளில் எழுப்பப்படும் புதிர்களால் அவர்களை உள்ளிழுத்து, ஆழ்ந்து சிந்திக்கச் செய்து தமிழைப் புகட்டுதல். புதிதாய் அறியப் புகும் மாணாக்கர்களையே பங்கேற்கச் செய்து பயிற்றுவித்தல். நன்றாய்த் தமிழறிந்த நல்லோர்க்கு அறிந்தனவற்றை அகழ்ந்தெடுத்தல். மொழியின் கட்டுமானம். இலக்கணக் குறுக்குவெட்டுத் தோற்றம். சொற்களின் பயன்பாடுகள். சொற்றொடர்களின் வகைப்பாடுகள் என அடிப்படையான தமிழறிவை ஊட்டும் பெருமுயற்சியே இந்நூல். இளையோரின் கல்விக்கும் ஆசிரியரின் கற்பிப்பிற்கும் உதவ வல்லது. தமிழறிந்த தலைமுறையை உருவாக்க நினைக்கும் பெற்றோர் இந்நூல் வழியைப் பற்றியே தங்கள் பிள்ளைகட்குத் தமிழ் கற்பிக்கலாம்.
தமிழோடு விளையாடு- மகுடேசுவரன்
₹200.00 Regular Price
₹180.00Sale Price
10% Discount

