தமிழ்நதியின் எழுத்தில் என்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்னவென்றால், புனிதம் உடைவது. அது உடைகையில் பாசாங்கும் அவசரமாக விரைந்து மறைகிறது. போர், பேரிடர், பெருந்துயர் இவற்றிற்கும் கலைக்கும் ஏதோ கண்ணுக்குப் புலப்படாத தொடர்பு இருக்கவேண்டும், வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைக் காணநேர்ந்த முதிர்ச்சியே தமிழ்நதியின் எழுத்துகளைத் தனியாக அடையாளம் காண்பிப்பது. விடாது கதை எழுதுவதற்கும்கூட தலைக்குள்ளிருக்கும் பறவை, எழுதுபவரோடு விடாது உரையாட வேண்டும் போலும். ஐந்து வருட இடைவெளிக்குப் பின் வெளிவரும் தொகுப்பு இது. நீண்ட காத்திருப்பு எப்போதும் ஏமாற்றத்தைத் தருவதில்லை.
தங்க மயில்வாகனம் - தமிழ்நதி
₹160.00Price

