Author: Manaseegan
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி புதுமைப்பித்தனா ? மௌனியா ? என்கிற கேள்வி தொடக்க காலத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
உண்மையில் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் சிறுகதையின் திருமூலராக காலம் தாண்டி வாழ்ந்து கொண்டிருப்பவர் கு. அழகிரிசாமி மட்டுமே.
நான்கு கதைகளுக்கு மேல் எதையுமே வாசிக்காமல் அவசர கோலத்தில் தீர்ப்பெழுதிய விமர்சகர்களின் பார்வைக் கோணத்திற்கு மாற்றாக கு. அழகிரிசாமியின் பல்வேறு பரிமாணங்களை அவருடைய நூற்றாண்டு விழா தருணத்தில் முழுமையாகக் கவனப்படுத்த விழைகிறது இந்நூல்.
தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்- மானசீகன்
₹90.00Price

