Author: K.Kamala kannan
அட இது எல்லாம் சேர்ந்து ஏற்படுத்தியது. போலந்தின் யூதர்கள் மாட்டிக்கொண்டனர். இதை நான் எழுத்தாளர் குழுமத்தில் சொன்னபோது அவர்கள் என்னைத் தாக்கினர். அவர்கள் முட்டாள்தனமான தளராத நேர்மறை நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவருமே அழிக்கப்பட்டு விடுவோம் என்று அறிவேன். போலந்துக்காரர்கள் நம்மைத் தொலைத்துக்கட்ட நினைக்கிறார்கள். அவர்கள் ஒரு தேசத்திற்குள் இருக்கும் இன்னொரு தேசமென நம்மைக் கருதுகிறார்கள், அதாவது ஒரு புற்றுநோய் போல நம்மைக் கொன்றொழிக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லையே தவிர. ஹிட்லர் அவர்களுக்காக அதைச் செய்தால் துளி கண்ணீர் கூட சிந்தமாட்டார்கள். ஸ்டாலின் நிச்சயமாக நம்மைக் காக்க மாட்டார். ட்ராட்ஸ்கியர்களது எதிர்ப்பு தொடங்கியதிலிருந்து, சும்யூனிஸ்ட்டுகள் நமது மோசமான எதிரிகளாகிவிட்டனர். ட்ராட்ஸ்கியை யூதாஸ் என்றே ரஷ்யாவில் குறிப்பிடுகின்றனர். உண்மையில் யூதர்கள்தான் பெரும்பாலும் ட்ராட்ஸ்கியர்களாக இருக்கின்றனர். யூதன் ஒருவனுக்கு ஒரு புரட்சியை நீங்கள் அனுமதித்துவிட்டால், அவன் அடுத்தடுத்துக் கேட்டுக்கொண்டே இருப்பான் நிரந்தரமாக அவனுக்கு ஒரு மீட்பரைத் தந்துவிட்டால், அடுத்தடுத்த மீட்பர்களைக் கேட்டுக்கொண்டே இருப்பான். பாலஸ்தீனத்தைப் பொறுத்தவரை, உலகமே நமக்கென ஒரு நாடு இருப்பதை விரும்பவில்லை. கசப்பான உண்மை யாதெனில் இன்று பல யூதர்களே யூதர்களாக இருப்பதை விரும்பவில்லை. ஆனால் முழுமையாகப் பிற இனத்தாரோடு கலந்துவிடுவதற்கும் போதிய காலமில்லை. இந்த யுத்தத்தில் எவர் வென்றாலும் சரி, நம்மைப் பூண்டோடு அழித்து விடுவார்கள்.

