சகாத்தம் 1671ன் மேல் செல்லா நின்ற கொல்லம் 905 u (1730) புரட்டாதி மீ... புதனாச்சையும் அமரபட்சத்துச் சத்தமியும் சித்தநாமயோகமும் சிங்ககரணமும் பெற்ற ரோகிணி நாட் செய்த வெள்ளாட்டி விலையோலைக் கரணமாவது நாஞ்சிநாட்டு உதையன் புதுவூரில் அணஞ்சிப் பிள்ளை மகள் அணஞ்சிப்பிள்ளைக்கு முறத்தாநாட்டுப் பணகுடியில் உத்தமாநாச்சியார் மகள் மயிலேறும் பெருமாள் உள்ளிட்டார் நான் விலைகொண்டுடையவனாய் ஆண்டனுபவித்து வருகிற வெள்ளாட்டி காந்திமதியை விலைகொள்வாருளரொ கொள்வாருளரொ என்று நான் முற்கூற இவர் கொள்வோங் கொள்வோமென்று பிற்கூறி எம்மிலிசைந்து எதிர்மொழிந்து மறுமொழி கேட்டுத் தம்மில் பொருந்தி நாஞ்சிநாட்டு பூதப்பாண்டி மன்றில் நிறுத்தி நால்வர் கூடி நடுவர் முன்பாசு விலை நிற்செயித்த அன்றாடகன் வழங்கும் நெல் மேனி கலியுகராமன் பணம் (20) ஊசிக்கரணம் பணம் (ஒன்றும்) ஆக பணம் ஊசிக்கரணம் பணம் நீக்கி பணம் 2ம் விலையாவணக் களத்தேக்காட்டி யெற்றிக் கைச்சிலவாசு கொண்டு விலையறவித்துப் பொருளறப்பற்றி விற்று விலைப் பிரமாணஞ்செய்து குடுத்தென் உத்தமநாச்சியார் மகள் மயிலேறும் பெருமாள் உள்ளிட்டார் அணஞ்சிப்பிள்ளை மகள் அணஞ்சிப்பிள்ளைக்கு நான் விலை கொண்டுடையவளாய் ஆண்டனுபவித்து வருகிற வெள்ளாட்டி காந்திமதிட்கு இதுவே விலை ஓலையாவது....
top of page
bottom of page

