19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்ய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் தெற்கு தீபகற்பத்தில் இருந்த தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களைப் பற்றி டேவிட் லட்டனின் வழிநின்று சுருங்க உரைப்பது இந்நூலின் நோக்கமாகும். காலனிய ஆட்சியில் புகுத்தப்பட்ட ஆரம்பக்கட்ட வணிக முதலாளிய உற்பத்தி முறையில் தூண்டிவிடப்பட்ட தமிழ்ச் சமூக மாற்றங்கள் பாரம்பரியமான பாண்டிய, சோழ, தொண்டை மண்டலங்களில் வெவ்வேறு விதங்களில் நிகழ்ந்தன. இச் சமூக மாற்றங்களினூடாக தலித் சமூகப் பிரிவுகள் அந்தந்த மண்டலங்களில் எவ்வாறு தங்களது வாழ்விருத்தலில் மேம்பாடுகளை எட்ட முயன்றன என்பதைக் கோடிட்டுக் காட்டுவதே இந்நூலின் நோக்கம்.
ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்- ராஜ் கௌதமன்
₹45.00 Regular Price
₹40.50Sale Price
10% Discount

